புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்குக் காட்டுவது வேறு காடு. மின்னலின் கணநேரம்தான் நமக்கு நிலைத்த காட்சியெனும் பிரமையை அளிக்கிறது.