"பிரபஞ்ச இயக்கம் மூன்று குணங்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள் இவை. இவை ஆதிப்பிரகிருதியிலும் இருந்தே ஆக வேண்டும். இந்த இயக்கமுள்ள இயற்கையில் இக்குணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பிணைந்து, பலகோடி உருவங்களையும், செயல்களையும் உருவாக்கியபடி உள்ளன. அப்படியானால் இயக்கமற்ற ஆதி இயற்கையில் இவை பரஸ்பரம் பூர்த்தி செய்தபடி, சமநிலையில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சமநிலையே அதை மகாமௌனத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அநாதி காலத்தில் அது அசைவற்ற பெரும் இருப்பாக உறைந்திருக்க வேண்டும். என்றோ, ஏதோ ஒரு கணத்தில், ஒரு முதல் தொடக்கம் நிகழ்ந்திருக்கலாம். அதன் மூலம் முக்குணங்களின் சமநிலை குலைந்து, முதல் சலனம் தொடங்கியிருக்கலாம். சலனத்திலிருந்து சலனங்களின் பெருக்கம் தோன்றியது; சலனமே வடிவான இப்பிரபஞ்சம் உருவாகியது என்று நாங்கள் கூறுகிறோம். முக்குணங்களும் கலந்து கலந்து, மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் முழுச்சமநிலையை அடையும். அன்று மீண்டும் இயற்கை தனது ஆதிமகாமௌனத்துக்குத் திரும்பும்."
No comments:
Post a Comment